எனது மிக நெருங்கிய உறவினர் இறந்து விட்டார்
ஏதோ கண்காணாத தேசத்தில்,
அவருக்கென
ஒரு சவப்பெட்டி
ஆறடியில்.
நானும் அந்த மலர்ச்சாலைக்கு
போயிருந்தேன்.
விதம் விதமாக
ஒவ்வொரு விலையில்
பல மரங்களின் அர்ப்பணிப்பில்.
ஒரு பூ மட்டும் இரண்டு கதவுகளில்
இரண்டு பூக்கள் இரண்டு கதவிலும்
ஒரு பூச்செண்டு
அதனுடன் ஒரு பூ
நீங்கள் என்ன ரசனையில் எதிர்பார்கிறீர்கள்?
என்னோடு வந்தவர்
கஷ்டப்பட்டு ஒன்றை முடிவு செய்தார்.
எனக்கும் பிடித்திருந்தது,
ஆனால் கதவுகள் மூடும் விளிம்பில்
ஏதாவது ஒரு அலங்காரம் இருந்திருக்கலாம்,
இறந்தவர் வெளிநாட்டவர் ஆச்சே.
அவர் சுற்றி சுற்றி ஏதும்
உடைசல்கள் இருகின்றதா என்று பார்த்துகொண்டார்.
வெளிநாட்டவர் இறைத்த
சில்லறைகள் எங்காவது ஒரு சின்ன உடைசலுக்குள்லாலும்
வெளியே விழுந்து விடலாம்.
என் பேர்சில் இருந்த
அப்பா அம்மா அக்கா
எனது நான்கு மாத தம்பி எல்லோருடனும்
நான் நின்று எடுத்த
புகைப்படைத்தை பார்த்துவிட்டு
ஒரு முறை
அந்த
சவப்பெட்டியின்
விளிம்பில் விரலால் தேய்த்து
தொட்டேன்.
விளிம்பு கீறி
தரையெல்லாம் ரத்தம்.
தேவை.