கருமொழி

பூஸ்,
பகலைப்போலவே
இரவென்பதும் பெருங்கனவு.

கருமை
நித்திலமான சுடர்

உன் நெடி பாவும்
இவ்விரவு
ஓய்ந்த வெள்ளமொன்றில்
சேகரமாயிருக்கும் ஒளிப்போட்டுக்கள்

கண்களை திறந்துகொண்டே
நிர்பந்திக்கப்பட்ட
கதிரையிலிருந்து உன்னை மீட்கிறேன்

இரவொரு சொல்
அல்லது மௌனம்

பூஸ்,
இரவொரு இசை

நிறைவேறா சபதங்களின்
மொழி.

Leave a Comment