தாடிக்காரன் அறிமுகம் ஆனார் . இன்னும் திரை இசையிலேயே மூழ்கி பொய் இருப்பதற்கு இவர்தான் சால காரணம். காரணம் வாலி , வைரமுத்துவிடம் இருந்து என்னை கிள்ளி கிள்ளி எடுத்தார். நானும் இந்த நூற்றாண்டும் வாசித்த பின் முழுமையாக அல்லி எடுக்கப்பட்டு விட்டேன். வவுனியாவின் வாடிக்கையான கடை எனக்கு வாலியை திருப்பதி செய்யவில்லை. நகர்ப்புறங்களிலும் அலைந்தேன் வாலி அங்கொன்று இங்கொன்றாய் சிதறிக்க்கிடந்தார் ..அவரை ஒன்று சேர்த்ததில் அவரின் நகம் அளவுதான் உருப்பெற்றது. எனக்கு வாலி மீது இருந்த தீராத காதல் ஊரை விட்டு ஓட வைத்தது. கொழும்பு நகரின் அழுக்கான வீதிகளையும் உடைந்து சிதறிப்போன சந்ததிகளையும் அறிமுகப்படுத்தியது. வாலிக்காக ஒரே ஒரு முறை தான் புத்தக கொள்வனவுக்கு சென்றிருந்தேன். பை நிறைய புத்தகங்களுடன் திரும்பினேன் திருப்பதி கொண்டேன். வாலியை தேடிய இடங்களில் என்னோடு மேலும் சிலரையும் தேங்கிக்கொண்டார்கள். புதுமைப்பித்தன் அவர்களில் மிக முக்கியமான ஒருவர். புதுமைப்பித்தன் சிறுகதைகள் பாகம் ஒன்று என்ற புத்தகம் என் கைகளில் பட நானும் வாசித்து பாப்போம் என்று பில் போட்டாகி விட்டது . புத்தகத்தின் கனத்திற்கு ஏற்ற பணமும் காலியாக போனது. வாலியின் ஒரு புத்தகத்தை வைத்து விட்டு புத்தமைப்பித்தனை சொருகிக்கொண்டேன் .
என் அலமாரி ராக்கைகளை அலங்கரித்த முதல் சிறுகதை தொகுப்பு இதுவாகும். வாங்கியதில் இருந்த ஆர்வம் வாசிப்பதில் ஏற்றப்படவில்லை. பாகம் பக்கமா எழுத்துக்கள் என்னை முகம் சுளிக்க வைத்தன. ஆறு ஏழு வரிகளுக்குள் முடிந்து விடுகிறது கவிதை இது என்ன பக்கம் பக்கமாக என்ற சலிப்பு ஏற்றப்பட்டது. புதுமைப்பித்தன் காலவரையறை இல்லாமல் ஒதுக்கிவைக்கப்பட்டார் (இது 2014 இல்). மீண்டும் வாலி ……அவரின் வாழி இல் நாட்களை நகர்த்தினேன் பெரிய கவிஞர் என்ற மமதையில். இடையில் வாசிப்பும் அனுபவ பகிர்வும் (தமிழ் மாமன்ற நிகழ்வு , தமிழ்மாமன்றம் பற்றி விரிவாக எழுதவேண்டும் ,எழுதுகிறேன் காலதாமதமாக ) நடந்த போது தன அப்துல் ரகுமான் அறிமுகம் ஆனார். நான் வாசித்த தனிநபர் எழுதிய புத்தகங்களில் அதிகமானவை இவருடையதே. அன்று வரை இலகுவாக இருந்த கவிதைகள் இவரால் புது பரிமாணம் பெற்றன. ஒவ்வொரு வரிகளுக்கு பின்னும் சமுத்திர பரப்பு விடயங்கள் பொதிந்து இருப்பதை அவர் காட்டினார். சொற்களின் கோர்வைகள்தான் கவிதை ஏன்டா விம்பம் சிதறி பல கோர்வையான விடயங்கள் சில சொற்களில் என்று புரிய ஆரம்பித்தது. கவிதையை மட்டும் அன்றி பல கவிஞர்களையும் அறிமுகம் செய்தார் . இன்று நான் மொழிபெயர்க்கப்பட்ட அரபுக்கவிதைகளை வாசிக்கவும் இரசிக்கவும் அவரே பிள்ளையர் சுழி . அவரின் புத்தகங்கள் என்னை இன்னொரு தளத்திட்கு எடுத்து சென்றது. இன்று நான் வியந்து பார்க்கும் கவிஞர் அப்துல் ரகுமான் என்பதில் என் வாசிப்பு வட்டம் அடைந்துள்ள விருத்தியை உணரக்கூடிய அளவு உள்ளது.
இது இவ்வாறு இருக்க வவுனியா தேசிய ……………




