வாகனங்களை உதாரணப்படுத்தல் என்பது மிக எளியவகை வெளிப்பாட்டுக்கான ஒரு யுக்தி ஆகும். வாகனங்களில் சொகுசு கார் பயணம் தான் மிக அருமையானது. பயணத்தில் இருவகையானோர் பங்குபற்றுகின்றனர். காரை ஓடுபவன் , அருகில் இருப்பவன். இருவர்க்கும் பௌதீக ரீதியில் அருகாமை என்ற ஒற்றுமை இருந்தாலும், மனதளவில் நீண்ட காத தூர இடைவெளி உண்டு. இதை இருநிலைகளிலும் இருந்து அனுபவித்தவர்களுக்கு புரியும். ஓட்டுநர் தனது ஐம்புலன்களையும் அடக்கி பாதுகாப்பு என்ற ஒரே அரணை தன்னை சுற்றி அமைத்து, தரிப்பிடம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். புலன் சிதறினால் கார் சிதறிவிடும், பின்னர் ரத்தம், உயிர் , அடுத்தவன் உடைமை என்று பலதும் சிதறும். எந்த கவனக்கலைப்பானிலும் மாட்டிக்கொள்ளாமல் பயணிக்கவேண்டும். ஓட்டுநர் செய்வது தவம். இன்பமான நாளாக இருந்தாலும் துன்பமான நாளாக ஒரே மனநிலைதான். தவக்கலைப்பு உயிர்ச்சேதம்.
இருவருக்குமான முரண் சுமை – இது அவர்களின் ஆசனத்தில் தங்கியுள்ளது.
நல்லவழி தீயவழி என்ற பாதைப்பிரிவும் இதை ஒத்ததே.
வாழ்க்கையோடு ஓட்டுனரையும் அருகில் உள்ளவரியும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் உங்கள் ஆசனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியே தீர்மானிக்கிறது என்பது திண்ணம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. ( குறள் 37 )
உன் ஆசனம் உன் வழியில் தங்கியுள்ளது.