“வினோத நூலகம்” – சிறுகுறிப்பு

எந்த சிறுகதையை நான் வாசித்தபோதும் “வினோத நூலகம்” என்ற சிறுகதையை வாசித்ததில் கிடைத்த அனுபவம் அவை எதிலும் கிடைத்ததில்லை. ஜி. குப்புசாமி மொழி பெயர்ப்பில் கல்குதிரையின் கார்கால இதழ் ஆவணி புரட்டாசி 2016 இல் வெளிவந்த ஹாருகி முராகாமி இன் சிறுகதை தான் வினோத நூலகம். கதைக்கு விமர்சனம் என்றெல்லாம் எழுதமுடியாதஅளவு என்னுள் தாக்கம் செலுத்துகிறது இந்த புனைவு. ஒரு மிக சாதாரண நிகழ்ச்சியில் தொடங்கி வரிக்கு வரி விரிந்துகொண்டே போகின்ற புனைவுத்தன்மையில் மூழ்கிப்போய்விட்டேன். கதை எந்த பக்க நகர்வினை கொண்டு செல்கின்றது என்ற கேள்வி இன்னும் என்னுள் விதைத்த படியே இருக்கின்றது. மூன்று முறை வாசித்ததிலும் மூன்றுவிதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகசியமாக அதில் வருகின்ற எல்லா நிகழ்வுகளும் அதில் கொடுக்கப்படுகின்ற எல்லா உணவுகளும் அதிலே வினோதமாக சஞ்சாரம் செய்கின்ற கிழவரும் ஆட்டுத்தலை காவலரும் உருவை மாற்றிக்கொண்டே இருக்கின்ற நிலவாகவும் குருவியாகவும் மாறுகின்ற அழகிய பெண்ணும் என் மனதின் மூலைகளில் ஒளிந்துகொண்டிருக்கின்ற புதுவிதமான அழகியலை தூண்டுகின்றன.
விநோதநூலகம் என்ற சிறுகதையை வாசிக்க
https://brinthansite.wordpress.com/2017/04/16/விநோத-நூலகம்-ஹாருகி-முர/

நடனத்திற்கு பிறகு – இரு தளங்களின் கூடல்.

அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் எம்மை சென்றடைகின்றன என்ற சிறிய கேள்விக்கான விடையின் பரப்பு மிகப்பெரியது.எந்த வாழ்வில் நாம் இருந்துகொண்டிருக்கிறோமோ அந்த வாழ்வியலில் உள்ள அக புறக் கூறுகள் எம்முள் செலுத்தக்கூடிய ஆதிக்கத்தின் அளவை ஆராய்தல் மிக முக்கியமானது. புறக்கூறுகளும் அத்தியாவசியமான ஒன்றே இருந்தும் அக்கூறுகள் செலுத்தக்கூடிய நுட்பமான நகர்வுகளை புறக்கூறுகள் நடத்திவிட முடியாது. மிகச் சிறிய நிகழ்வுகளில் இருந்து பெரும் படியான நிகழ்வுகள் வரை அதன் அகக்கூறுகள் கொண்டிருக்க கூடிய கனதியினை புறக்கூறுகள் கொண்டிருக்குமா என்பது சந்தேகம். இவ்வளவு கனதியான அகக்கூறுகள் எம்முள்ளே ஏற்படுத்துகின்ற உளவியல் மாற்றங்கள் பற்றி பேசுவதே நடனத்திற்கு பிறகு என்ற டால்ஸ்டாயின் சிறுகதை.
 
நாவல்களில் தனக்கான நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட டால்ஸ்டாயால் சிறுகதைகளில் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை, என்ற குறையை போதுமானவரை நிரப்பிக்கொள்வதற்கு சான்றாக இந்த சிறுகதையை குறிப்பிடலாம். இந்த கதை அவரின் சிறுவயது அனுபவத்தின் வெளிப்பாடாகவே அவரின் 75வது வயதில் எழுதப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாய் பெரும்பாலும் தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் குறிப்புகளாக்கி வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர். அவற்றிக்கு சிறு புனைவுகளை சேர்த்து நாவல்களாயும் சிறுகதைகளாயும் எழுதுகின்றவர். சுந்தர ராமசாமி குறிப்பிடுவார்,” பெரும்பாலான காலம் கடந்து வந்திருக்கின்ற எழுத்துக்கள் எல்லாமுமே அனுபவங்களின் குறிப்புகள் தான்.”  மற்றவை எல்லாம் மின்னல் போல பளிச்சிட்டு மறைந்துவிடும் , அனுபவங்கள் வானத்தை போல நீள அகலமற்ற நிலவுகையை உடையவை.
 
ஆழ்ந்த அனுபவமுள்ள எழுத்தாளனாக கருவினை விடய சித்தரிப்புக்கள் மூலம் அணுகுகின்ற யுக்தியை இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. நடனத்தின் பின் என்ன என்ற தேடலை உருவாக்குகின்ற காதல் கலந்த அக்கால சூழ  பின்னணியிலேயே கதையின் தளம் அமைகின்றது.
 
இந்த சிறுகதை இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளில் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. இரவிரவாக சந்தோசமாக ஆடப்பட்டு முடிந்த mazurka என்ற நடன இரவொன்றை பற்றியும் அடுத்தநாள் காலை வன்மையாக தாக்கப்பட்டு இராணுவத்தால் இழுத்துவருகின்ற தாத்திரியன் பற்றியும் வெவ்வேறு உணர்வு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பொதுவானவர்கள் கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் உம் முதல் நாள் இரவு அவருடன் நடனமாடிய வரிங்கா என்ற உயர்குலப்பெண்ணின் தந்தை ஆவார்கள். வரிங்காவின் தந்தையார் ராணுவத்திலே உயர்பதவிவகிக்கின்றவர். இவர்கள் இவரோடு முதல் நாள் இரவு வரிங்கா அடுத்தநாள் காலை தாத்திரியன் என நான்கு முக்கிய பாத்திர வார்ப்புகள் இருக்கின்றன.
 
முதல் நாள் இரவில் பிரமாண்ட விருந்துபசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கூடவே mazurka என்ற போலந்தில் ஆரம்பமான ஆடற்கலையும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. அந்த விருந்து தான் கதைசொல்லிக்கும் வரிங்கா என்ற இளம் அழகிய மாதுக்குமான காதல் உருவாகிய புள்ளியாகும். அத்தனை வருட மொழி அனுபவமும் திரண்டு அந்த நடனத்தின் எழிலையும் இவான் வாசிலியேவிச் மற்றும் வரிங்காவின் காதலையும் கொண்டாடிக்கொண்டிருந்தது. அணுவணுவாக அங்க அசைவுகளையும் இருவருக்குமான ஒருங்கிணைப்பையும் ஒரு பூவின் இதழ் மேலே விழுகின்ற பனித்துளியினை போல வர்ணித்துக்கொண்டு செல்வார். காலம் ஆக ஆக இவான் வாசிலியேவிசின் காதல் ஆற்றாமை எழுகின்ற வீரியமும் இருவரும் நடனத்தின் முடிவில் பிரிந்து சென்றதும் இவான் வாசிலியேவிச் வரிங்காவை நினைத்து உழல்வதும் சொற்களோடு உணர்வுகளையும் கடத்திக்கொண்டு செல்கின்றது. இது ஒருபுறம் செல்ல இன்னொருபுறம் அதே இரவில் தந்தை மகளுக்கான உணர்வுகளை அதே பொறுமையுடன் டால்ஸ்டாய் விவரிக்கின்றார். தன் மகளின் விருப்பத்திற்கு இணங்க தனக்கு பொருத்தமில்லாத காலணியை அணிந்து கொள்ளும் தந்தையாக  காட்டப்படுகிறார். அந்த இரவை அதோடு முடித்து விடாமல் நீட்சியாக்கி இவான் வாசிலியேவிச் வீடு சென்று காதல் வழியால் துடிப்பதாகவும் காலை அவளை நேரில் சென்று சந்தித்தேஆக வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி அடுத்த நாள் நிகழ்விற்கு நிகழ்வு கோர்ப்பை ஏற்படுத்துகிறார்.
 
முதல் நாளில் இருவேறு விதமாக காதல் என்ற மென்மையான உணர்வுநிலையை வெளிக்கொண்டுவந்த டால்ஸ்டாய் ஒரே இரவில் வாசகரின் உணர்வு போக்கை மாற்றி விடுகிறார். அன்பை உருகி கொட்டிக்கொண்டிருந்த எழுத்துக்கள் செந்தழல் போல கடுமையாகிப்போனது. காலையில் வரின்க்காவை பார்ப்பதற்க்கு வீதியில் இறங்கிய இவான் வாசிலியேவிச்க்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதுவரை ஒரு மிக சிறந்த தந்தையாக தெரிந்த வரிங்காவின் தந்தை ஒரு கொடூரமான ராணுவஅதிகாரியாக தெரிகின்றார். தாத்திரியனை ஈவுஇரக்கமின்றி தாக்குகின்ற அணியை வழிநடத்தும் கொடூரனாக காணப்படுகின்றார். அவ்விடங்களில் டால்ஸ்டாய் அன்றைய ரஸ்சியன் சமூகத்தினுள் விதைந்து கிடந்த சாதியத்தை எடுத்தாளுகிறார். உணர்வு ரீதியில் ஒரு தாத்திரியனுக்கும் உயர்குல இராணுவ அதிகாரிக்குமான முண்டல் இதில் பேசப்படுகின்றது. இதையெல்லாம் கண்ணுற்ற இவான் வாசிலியேவிச் தன் காதலை அதோடு முடித்து கொண்டு அரச வேலைக்கு இனி சேரப்போவதில்லை என்ற முடிவுடன் வீடு திரும்புகிறான். இதோடு கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் தன் அனுபவத்தை முடித்துகொள்கிறார்.
 
முதல் இரவில் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் ஆத்மாத்தமாகவும் கருதப்பட்ட காதல் இரண்டாம்நாளில் இடமற்றுப்போகின்றது. ஒரு ஆழமான உணர்வின் நிலவுகை நிரந்தரமானது இல்லை. சந்தர்ப்பங்கள் திசைதிருப்பக்கூடியன என்ற ஆழமான கருத்தியலை விதைக்கின்றது. வரிங்காவின் தந்தையின் உண்மை முகம் இராத்திரி விருந்தில் இருந்ததாகவும் அவரின் பணியே இந்த கடுகடுப்பான நிலைக்கு அவரை உருமாற்றியதாகவும் இவான் வாசிலியேவிச்நினைத்து அரசவேலையை வெறுத்திருக்கலாம். ஆனால் அவனின் தீராத காதல் தாகம் சில நொடிகளுக்குள் வற்றிப்போனதிற்கான காரணத்தை தேடிய வாசகரை கொண்டு செல்கிறது நடனத்திற்கு பிறகு. இவான் வாசிலியேவிச் ஏற்பட்ட உணர்வு நிலை போராட்டத்தில் மேலோங்கிய தடுப்புகள் அவன் ஆழமற்ற உணர்வுகளை உந்தி வெளியேற்றியிருக்க கூடும் என்றே எண்ண தோன்றுகின்றது. இப்படியான நுண்ணிய நகர்வுகளுடன் செல்வது தான் வாழ்க்கை என்ற யதார்த்தமான பார்வையையும் வாசகனுக்கு கூறிச்சென்றிருக்கின்றது.
 
After the dance ஐ ஆங்கிலத்தில் வாசிக்க
https://ebooks.adelaide.edu.au/t/tolstoy/leo/after_the_dance/

கிராமியத்தை பதிவிடும் சுரா – 01

அதிகாலை பனியின் குளிர் போர்வைகளை கழற்ற விடாமல் இறுக்கி கொண்டது. இருந்தும் எழுந்தன வேண்டிய கட்டாயம் , என்னை கால் மனதுடன் எழுப்பி விட்டிருந்தது. வழமையாக டீ கொண்டுவரும் குட்டியும் இன்றில்லை, இனியும் வர மாட்டாள். அவளுக்கான வாழ்க்கை பனிக்காட்டில் காத்திருந்தது. டீ இப்போதெல்லாம் வெளி மேசையில் தான். ஆறிய பின்தான் பெரும்பாலான நாட்களில் டீ குடித்து இருக்கிறேன், எனக்கு அதிகாலையில் தூங்கித்தான் பழக்கம். மூன்று அல்லது மூன்றரை மணிக்கு தான் என் நாளாந்தம் நிறைவுபெறும். எழுந்திருக்க ஏழு , பின்தான் என் ரூட்டின்.
இன்று அதிகாலை வழமை போல் இல்லை, கூப்பிடு குரல்கள் அதிகமாகவே இருந்தது. போர்வையை அகற்றிக்கொண்டு எழுந்தேன். அம்மம்மா ,” தம்பீ , இங்கபாருடா இதுகள் செய்யுற அட்டகாசத்த , குப்ப பாக் எல்லாம் கிளறுதுகள்.”
சுந்தர ராமசாமி ஒரு தலை சிறந்த புத்தியல் (modern ) எழுத்தாளர். இவரது படைப்புகளில் அதிகம் எதிர்காலவியல் சார்ந்த கொள்கைகள் மிக ஆழமாக தென்படும். அப்படியான ஒரு சிறுகதை தொகுப்புதான் தான் “குரங்குகள்”. யாத்ரா என்னும் சஞ்சிகையில் 1978ஆம் ஆண்டு வெளிவந்தது குரங்குகள். எதிர்கால தர்க்கவியல் சார்ந்த ஒரு புத்தியல் படைப்பு தான் குரங்குகள். சுராவின் வழமையான , நேர்த்தியான மொழிநடையில் குரங்குகளின் பரிணாமத்தை அவற்றின் வழமையான வாழ்க்கை நிலையையும் சொற்களின் ஊடு கட்டமைத்து வெளிப்படுத்தும் விதம் குரங்குகளில் அதீதமாக தென்படுகிறது.
oru-puliyamarathin-kathai
சுரா பெயரில்லா கிராமத்தை கூறும் சந்தர்ப்பங்களில் இலக்கிய சுவை ததும்ப ததும்ப சொற்களை குழைக்கின்றார் . இயற்கை வனப்பையும் குரங்குகளின் வாழ்விடங்களை சொல்லும் போது முற்போக்கு எழுத்தாளர் என்ற பரிமாணத்தை தாண்டி தன்னுள் உள்ள கவிஞர் தனத்தை குழைக்கிறார் .
“கட்டை விரல் போல் நகரை விட்டு விலகியும் ஒட்டியும் இருந்த இடம் ”
“பரவசத்தால் குனியும் பயிரின் தலையை கோதிக்கொண்டு காற்று ஓடுவதை எப்போதும் பார்க்கலாம்.”
மக்களை சித்தரிக்கும் இடங்களில் வெறுமனே கிராம மக்களை படிப்பறிவு அற்றவர்கள் என்று தரம் தாழ்த்தி விடாமல் 78களில் கிராம மக்களிட்க்குள் விலங்கியல் படித்தவர்களும், பண்டிதர்களும் வாழ்ந்தார்கள் என்று கூறுமிடங்கள் முற்போக்கானவை. இன்று இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி கல்வியில் முன்னேறிய கிராம மக்கள் இதற்கு எடுத்துக்காட்டு.பெண்களின் அழகில் குரங்குகள் கவரப்படுத்தலும் ஆண்களின் கவலையும் கூறுமிடங்களில் சுரா சுவாரசியமாக கையாண்டுள்ளார்.
“அப்படியானால் பெண்களை குரங்குகள் பிடிங்கி கொள்ளும் காலம் வருமோ என்ற சந்தேகம் ஆண்கள் மனதில் ஊசலாட ஆரம்பித்தது.”
பெண்களுக்கு பிரச்சனை என்றவுடன் கொத்தித்தெழுந்த கிராம வாசிகளின் நாகரிகமான கோவம் கிராத்தின் சாதுவையும் சுராவின் அனுபவத்தையும் வெளிக்காட்ட கின்றன.