வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
இது லதீபன் அண்ணா அவர்களால் வாசிப்பு , சுஜாதா தொடர்பாக பகிரப்ட்ட பதிவிற்க்கான பின்னூட்டங்கள்
பதிவு
மற்றவர் பாராட்ட வேண்டும்,நம்மை கொண்டாட வேண்டும் என்ற நினைப்பிலே எழுத்துற்கு வந்தால் நீ நாசம்.
இங்கே நிறைய குப்பைமேடுகள் உண்டு அதிலே போய் உறக்கம் கொள்ளும் உன் எழுத்து.ஒருநாள் சரியத்தான் போகுது.
நிறைய விடயங்கள் வாசிக்க உண்டு.உலகம் போய்க்கொண்டிருக்கும் கடைசி விம்பநிலையினை நுனிப்புல் தனை மேய்ந்து விட்டேனும் எழுத்துக்கு வரலாம்
பாகுபலிகள், IPL, அனைவருக்கும் பிடிக்கிறது, ஆகா ஓகோ என்கிறார்கள்.ஆனால் உள்ளுக்குள் இருப்பதென்ன உன் id மனநிலையை காவு கொள்ளும் விடயங்கள் தான்.
வெறும் Cake இன் Icing மட்டும் நன்றாக இருப்பதால் அதை சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம் தானே?
அவ்வாறு தான் வாசிப்பற்ற எழுத்தும், வேண்டும் என்றால் சுஜாதாவின் சீடனாகலாம்.
ஆகவே இளந்தலைமுறையான நாங்கள் நிறைய வாசிப்போம் கலந்து பேசும் அதன் பின் எழுதுவோம்.
எனது பின்னூட்டம்
இங்கு சொடுகப்பட்டேன் என்னும் காரணத்தினால் எனக்கும் இந்த வாதங்களில் பங்குண்டு என்று எடுத்துக்கொள்கிறேன்.
பதிவின் நோக்கம் வலிமையான இலக்கிய எழுத்துக்கள் எம்மிடையே எழ வேண்டும் என்ற நோக்கில் எழுதபட்டிருப்பதாக எனக்கு தெரிகின்றது. பதிவை ஒரு பொழுதுபோக்கு வாசகன் என்ற நிலையில் இருந்து பார்க்காமல் தமிழ் இலக்கிய நலன் விரும்பி என்ற நிலையில் பார்க்கும் போது பதிவின் அத்தியாவசியத்தை விளங்கிக்கொள்ளலாம். என் தலைமுறை வாசகர்கள் வணிக எழுத்து என்ற மீளமுடியா வட்டத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை இன்று விஸ்தரித்து போய் விட்டது. வணிக எழுத்துகள் அளவுக்கு மீறி எம்மை சுற்றி இருப்பதால் வாசகன் அவற்றை படித்து பகுத்து அறிந்து கொள்ளும் கால எல்லை மிக நீளமானதாகவே நினைக்கிறன். பலர் மீளமுடியாமல் போன இடங்களும் உண்டு. இந்த அதிக கனமான எழுத்துக்குவியல் வாசகனை வாசகன் என்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டுவராது.
ஆரம்ப நிலை வாசகன் சுஜாதாவிலிருந்து ஆரம்பித்தல் பொருத்தமானதே. ஆனால் அவனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு தகுந்த வழிகாட்டல் அவசியமே. எம் சமூகத்தில் பலரின் வழிகாட்டல் மேலும் மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிடகூடும். இதனால் வாசிப்பை பற்றிய வாதங்களும் பகிர்வுகளும் கலந்துரையாடல்களும் எம்மிடையே அவசியம். இன்று எம்மவர்கள் பலர் சரியான வாசிப்பு வழிநடத்தல்கள் இன்றி மட்டமான படைப்புகளை வெளிக்கொண்டுவருவது அவர்களின் பிழை இல்லை. சரியான வழிநடத்தல்கள் இன்மையே காரணம். இதை அனுபவம் உள்ளவர்கள் செய்வது மிக குறைவு.