ஆறாவது புதிய சொல்லில் அருண்மொழிவர்மன் எழுதிய “ஒழுங்குபடுத்தலின் வன்முறை” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, ஏழாவது புதிய சொல்லில் எனது கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சமகால சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தலின் வன்முறை பற்றிய உரையாடல்கள் அவசியப்படுகின்றன. பொதுஜனங்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் பரவலாக்கப்படவேண்டும். எட்டாவது புதிய சொல் வருகை தந்த நிலையிலும் பொதுவெளி உரையாடல்கள் எதுவும் இடம்பெறாமை வருத்தமளிக்கிறது.
அருண்மொழிவர்மனின் ” ஒழுங்குபடுத்தலின் வன்முறை ” யை வாசிக்க

புதிய சொல் 07 இல் வெளிவந்த எனது கருத்துக்கள்
இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கும் அதன் தவறிய பாதைக்கும் காரணமான சமூக கலாசாரம் ஒன்றின் மீதான கேள்வி எழுப்பப்படுகின்ற போது தான் மனிதனின் உயிர்ப்பு உறுதிசெய்யப்படுகின்றது. மாற்றத்தின் தேவை உணரப்படும் இன்னும் முன்னேற்றமே இல்லாத துர்ப்பாக்கிய அரசியல் அமைப்புக்குள் இருக்கின்ற நாம், எமது தேவையினை உணர்த்துகின்ற போது அது சமூகத்தில் விழிப்படையும். சமூகத்தின் அமைப்பில் கேட்கப்படவேண்டிய கேள்விகள் பல கேட்கப்படாமலே அமர்ந்து போவதனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு பாதிக்கப்படுபவர்களுக்கு கூட கிடைப்பதில்லை. இதை பற்றிய பேச்சுக்கள் சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்படவேண்டும். அது வாதிக்கப்படவேண்டும். அது பற்றிய பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் முன் கொண்டுவரப்பட்டு ஆராயப்படவேண்டும். இவை எல்லாம் எச்சமூகத்தில் பொறுப்பாக நடைபெறுகின்றதோ அச்சமூகம் முன்னேற்றமடைந்த சமூகமாக மாறுகின்றது.
ஒழுங்குபடுத்தலின் வன்முறை என்ற அருண்மொழிவர்மனின் கட்டுரையும் அதற்கான அழைப்பே. ஒரு மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பாடசாலை என்பதன் பங்கு முக்கியமானது. மனிதனின் மூளை வளர்ச்சியின் பெரும்பாண்மைக்காலம் பாடசாலைக்காலம். இதனால், பாடசாலைகளில் மாணவர் எவ்வாறு வழிநடத்தப்படுகிறாரோ அதுவே சமூகத்தின் அமைப்பாகப்போகின்றது. இலங்கையில் இன்றைய பாடசாலைக் கல்வி முறை பற்றிய விவாதம் இன்று அவசியமாகிப்போய்க்கொண்டிருக்கின்றது. இன்று முன்னேறிய உலக நாடுகளில் இருக்கின்ற கல்வி முறைமையிலிருந்து நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கின்றோம். அதனாலேயே சமூக பொருளாதார அடிப்படையிலும் பின்தங்குகின்றோம். இது அடிப்படைப் பிரச்சனையாகும். ஆசிரிய மாணவர் உறவு பற்றியே அவரின் கட்டுரை ஆராய்கிறது. பாடசாலையின் நடவடிக்கைகளில் அதிகமானவை ஆசிரிய மாணவ உறவினாலேயே முன்நகர்த்தப்படுகின்றது.
இன்றைய ஆசிரியர்களின் போக்கு, அவர் குறிப்பிடுகின்ற ஆசிரியர்களின் போக்கிலிருந்து வித்தியாசமானது. உடலியல் தாக்குதல்களைக் குறைத்து உளவியல் தாக்குதல்களை ஏற்படுத்தும் இழிவான முன்னேற்றம் இன்றைய ஆசிரியர் சமூகம் அடைந்துள்ளது. உடலளவில் ஒருவனை பலவீனப்படுத்துவதை விட மனதளவில் பலவீனப்படுத்துதல் அதிக கொடூரமானது என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய ஆசிரியர்கள் இயங்குகிறார்கள். இதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தவில்லை. பத்தில் ஒன்றாக இருக்கின்ற களைகள் மொத்த பயிரையே நாசம் செய்வது போல. ஒரு ஆசிரியரின் தொழில் இயலாமை நிலை மாணவனைத் தூண்டி இயங்க வைப்பது தான். பல இடங்களில் இயலாமை நிலை மாணவன் இன்னும் இன்னும் பின்தங்கிப்போதல் சாதாரணமாகிப் போகின்றது. மாணவருக்கு ஆசிரியர் மேல் வெறுப்பும் : அதுவே பின்னர் பாடத்தின் மீதான வெறுப்பாகவும் : தொடர்ந்து பாடசாலை, கல்வி , சமூகம் என்று தன்னை வெறுக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். அருண்மொழிவர்மன் கூறிய உடலியல் தாக்குதல்கள் செய்யமுடியாத கொடூரத்தை மனதளவிலான தாக்குதல்கள் செய்கின்றன. ஆசிரியர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்கள் தம்மைப் புகழ்கின்ற தமக்கு பின்னர் வால் பிடிக்கின்ற மாணவர்களை ஆதரித்து தனித்து சிந்திக்கின்ற மாணவனை அளவுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்லிச் சிரிப்பதை நேரடியாகவே கண்டிருக்கிறேன். பாட நடுவில் எழும்பி கல்விகளை சரியானமுறையில் மாணவர்கள் கேட்கும் போது, ஆசிரியருக்கு அதற்கான பதில் தெரியாதவிடத்து அவனை அவமானப்படுத்தி தன்னை நியாயப் படுத்துகின்ற ஆசிரியர்கள் இன்னும் மறையவில்லை. இன்று பிரம்பின் பாவனை குறைந்திருந்தாலும் சொற்களின் பாவனை அதிகமாகி விட்டன. குடும்ப பின்னணியை வைத்து மாணவனை பேசுதல், ஆசிரியருக்கு பிடித்தமான இன்னொரு மாணவனுடன் ஒப்பீடு செய்து பேசுதல், வகுப்பின் நாசுக்காக இழிதல், வகுப்பிலிருந்து ஒதுக்கிவைத்தல், பொதுத் தண்டனைப் பாகுபாடு என்பன அவர்களின் செயல்களில் சில. அதை விட ஒரு நிகழ்ச்சிக்கோ போட்டிக்கோ போகின்ற போது ஆசிரியப் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை மிக அபத்தமானது. இது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகியது என்று தெரியவில்லை. இதனால் எத்தனையோ மாணவர்களின் திறமை வளர்க்கப்படாமலே அழிந்து போயிருக்கின்றது. இந்த சமூகத்தின் பார்வையில் ஒவ்வாதவன் ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு ஆசிரியரின் கையிலிருந்து நழுவி விழுந்தவனாகவே இருக்கின்றான். ஆசிரியர்களின் பிடி உறுதியானதாயின் அவ்வாறான நழுவல்கள் ஏற்படாது: அல்லது குறையும்.

(கோட்டுச் சித்திரம் – http://assessingteachers.weebly.com/assessment-by-students.html)
அடிமைகளை உருவாக்குதல், அவற்றை பயன்படுத்திக்கொள்ளல்-ஆதிக்க மனநிலை என்பதன் அடிப்படை எண்ணக்கரு பாடசாலைகளிலேயே இன்றைய நாட்களில் விதைக்கப்படுகின்றன. பாடசாலைகள் போராட்ட குணமுள்ள மாணவர்களின் வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது. ஆசிரிய மாணவர் இடைவெளி என்பது ஆதிக்க சக்தியின் இடைவெளியாக கருத்தப்படுகின்றதே ஒழிய அறிதலுக்கானதும் அறியாமையின் தேடலுக்கானதுமான இடைவெளியாக உணரப்படவே இல்லை. இந்த இடைவெளியால் உருவாகின்ற மந்தைத் தனமே பல்கலைக்கழகத்திலும் தொடரப்படுகின்றது. சிந்தனைக்கான திறவுகோல் இயலாமை உணரப்படும்போதே திறக்கப்படுகிறது.
ஒழுங்கு படுத்தலின் வன்முறை நீண்ட விவாதம் ஒன்றின் தொடகப்பொருளாக்கப்படுகின்றது. இது ஒரு விவாதமாக மட்டும் அன்றி சமுகத்தில் தாக்கம் ஒன்றினையும் இதற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப் படவேண்டும்.
(முகப்பு ஓவியம் – https://www.aft.org/ae/fall2015/blank_villarreal)
ஒழுங்குபடுத்தலின் வன்முறை என்ற அருண்மொழிவர்மனின் கட்டுரையும் அதற்கான அழைப்பே. ஒரு மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பாடசாலை என்பதன் பங்கு முக்கியமானது. மனிதனின் மூளை வளர்ச்சியின் பெரும்பாண்மைக்காலம் பாடசாலைக்காலம். இதனால், பாடசாலைகளில் மாணவர் எவ்வாறு வழிநடத்தப்படுகிறாரோ அதுவே சமூகத்தின் அமைப்பாகப்போகின்றது. இலங்கையில் இன்றைய பாடசாலைக் கல்வி முறை பற்றிய விவாதம் இன்று அவசியமாகிப்போய்க்கொண்டிருக்கின்றது. இன்று முன்னேறிய உலக நாடுகளில் இருக்கின்ற கல்வி முறைமையிலிருந்து நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கின்றோம். அதனாலேயே சமூக பொருளாதார அடிப்படையிலும் பின்தங்குகின்றோம். இது அடிப்படைப் பிரச்சனையாகும். ஆசிரிய மாணவர் உறவு பற்றியே அவரின் கட்டுரை ஆராய்கிறது. பாடசாலையின் நடவடிக்கைகளில் அதிகமானவை ஆசிரிய மாணவ உறவினாலேயே முன்நகர்த்தப்படுகின்றது.
இன்றைய ஆசிரியர்களின் போக்கு, அவர் குறிப்பிடுகின்ற ஆசிரியர்களின் போக்கிலிருந்து வித்தியாசமானது. உடலியல் தாக்குதல்களைக் குறைத்து உளவியல் தாக்குதல்களை ஏற்படுத்தும் இழிவான முன்னேற்றம் இன்றைய ஆசிரியர் சமூகம் அடைந்துள்ளது. உடலளவில் ஒருவனை பலவீனப்படுத்துவதை விட மனதளவில் பலவீனப்படுத்துதல் அதிக கொடூரமானது என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய ஆசிரியர்கள் இயங்குகிறார்கள். இதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தவில்லை. பத்தில் ஒன்றாக இருக்கின்ற களைகள் மொத்த பயிரையே நாசம் செய்வது போல. ஒரு ஆசிரியரின் தொழில் இயலாமை நிலை மாணவனைத் தூண்டி இயங்க வைப்பது தான். பல இடங்களில் இயலாமை நிலை மாணவன் இன்னும் இன்னும் பின்தங்கிப்போதல் சாதாரணமாகிப் போகின்றது. மாணவருக்கு ஆசிரியர் மேல் வெறுப்பும் : அதுவே பின்னர் பாடத்தின் மீதான வெறுப்பாகவும் : தொடர்ந்து பாடசாலை, கல்வி , சமூகம் என்று தன்னை வெறுக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். அருண்மொழிவர்மன் கூறிய உடலியல் தாக்குதல்கள் செய்யமுடியாத கொடூரத்தை மனதளவிலான தாக்குதல்கள் செய்கின்றன. ஆசிரியர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்கள் தம்மைப் புகழ்கின்ற தமக்கு பின்னர் வால் பிடிக்கின்ற மாணவர்களை ஆதரித்து தனித்து சிந்திக்கின்ற மாணவனை அளவுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்லிச் சிரிப்பதை நேரடியாகவே கண்டிருக்கிறேன். பாட நடுவில் எழும்பி கல்விகளை சரியானமுறையில் மாணவர்கள் கேட்கும் போது, ஆசிரியருக்கு அதற்கான பதில் தெரியாதவிடத்து அவனை அவமானப்படுத்தி தன்னை நியாயப் படுத்துகின்ற ஆசிரியர்கள் இன்னும் மறையவில்லை. இன்று பிரம்பின் பாவனை குறைந்திருந்தாலும் சொற்களின் பாவனை அதிகமாகி விட்டன. குடும்ப பின்னணியை வைத்து மாணவனை பேசுதல், ஆசிரியருக்கு பிடித்தமான இன்னொரு மாணவனுடன் ஒப்பீடு செய்து பேசுதல், வகுப்பின் நாசுக்காக இழிதல், வகுப்பிலிருந்து ஒதுக்கிவைத்தல், பொதுத் தண்டனைப் பாகுபாடு என்பன அவர்களின் செயல்களில் சில. அதை விட ஒரு நிகழ்ச்சிக்கோ போட்டிக்கோ போகின்ற போது ஆசிரியப் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை மிக அபத்தமானது. இது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகியது என்று தெரியவில்லை. இதனால் எத்தனையோ மாணவர்களின் திறமை வளர்க்கப்படாமலே அழிந்து போயிருக்கின்றது. இந்த சமூகத்தின் பார்வையில் ஒவ்வாதவன் ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு ஆசிரியரின் கையிலிருந்து நழுவி விழுந்தவனாகவே இருக்கின்றான். ஆசிரியர்களின் பிடி உறுதியானதாயின் அவ்வாறான நழுவல்கள் ஏற்படாது: அல்லது குறையும்.

(கோட்டுச் சித்திரம் – http://assessingteachers.weebly.com/assessment-by-students.html)
அடிமைகளை உருவாக்குதல், அவற்றை பயன்படுத்திக்கொள்ளல்-ஆதிக்க மனநிலை என்பதன் அடிப்படை எண்ணக்கரு பாடசாலைகளிலேயே இன்றைய நாட்களில் விதைக்கப்படுகின்றன. பாடசாலைகள் போராட்ட குணமுள்ள மாணவர்களின் வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது. ஆசிரிய மாணவர் இடைவெளி என்பது ஆதிக்க சக்தியின் இடைவெளியாக கருத்தப்படுகின்றதே ஒழிய அறிதலுக்கானதும் அறியாமையின் தேடலுக்கானதுமான இடைவெளியாக உணரப்படவே இல்லை. இந்த இடைவெளியால் உருவாகின்ற மந்தைத் தனமே பல்கலைக்கழகத்திலும் தொடரப்படுகின்றது. சிந்தனைக்கான திறவுகோல் இயலாமை உணரப்படும்போதே திறக்கப்படுகிறது.
ஒழுங்கு படுத்தலின் வன்முறை நீண்ட விவாதம் ஒன்றின் தொடகப்பொருளாக்கப்படுகின்றது. இது ஒரு விவாதமாக மட்டும் அன்றி சமுகத்தில் தாக்கம் ஒன்றினையும் இதற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப் படவேண்டும்.
(முகப்பு ஓவியம் – https://www.aft.org/ae/fall2015/blank_villarreal)